/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
ADDED : அக் 24, 2025 04:20 AM
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ., 6 வரை சிறை காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்.,8ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் 4 படகுகளை பறிமுதல் செய்து, அதில் இருந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நவ., 6 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மீனவர்களை மீண்டும் போலீசார் சிறையில் அடைத்தனர். மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என மீனவர் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் சிறைக் காவல் நீட்டிப்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

