sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடல் எல்லையில் கூட்டு ரோந்து: இந்தியா- இலங்கை ஆலோசனை

/

கடல் எல்லையில் கூட்டு ரோந்து: இந்தியா- இலங்கை ஆலோசனை

கடல் எல்லையில் கூட்டு ரோந்து: இந்தியா- இலங்கை ஆலோசனை

கடல் எல்லையில் கூட்டு ரோந்து: இந்தியா- இலங்கை ஆலோசனை


ADDED : நவ 13, 2024 11:10 PM

Google News

ADDED : நவ 13, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; கொழும்புவில் நடந்த இந்திய கடலோர காவல்படை டைரக்டர் ஜெனரல்- இலங்கை கடற்படை அதிகாரிகள் கூட்டத்தில் இரு நாட்டுப்படையினரும் எல்லைப்பகுதியில்

கூட்டு ரோந்து சென்று கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்திய-ா- இலங்கை இடையே தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்கிறது. இருநாடுகளின் கடற்பகுதியும் குறைந்த துாரத்தில் இருப்பதால் சட்ட விரோதமாக போதை பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இரு தரப்பு கடற்படை, கடலோர காவல் படையினரும் இவற்றை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் பரமேஷ் சிவமணியும், இலங்கை கடற்படை வைஸ் அட்மிரல் பிரியந்தா பெரைரா ஆகியோர் சந்திப்பு கொழும்புவில் நடந்தது.இதில் இரு நாடுகளின் கடல் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது. கடல் பகுதியில் நடக்கும் கடத்தல், குற்றச் செயல்களை தடுப்பது குறித்து இரு நாட்டு வீரர்கள் அடங்கிய கூட்டு ரோந்து எல்லைப்பகுதியில் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கையின் கடலோர காவல்படை டைரக்டர் ஜெனரல் ரியர் அட்மிரல் ராஜபிரிய செரசிங்கே, கொழும்புவில் உள்ள இந்திய ைஹகமிஷன் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஆனந்த் முகுந்தன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us