sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கண்மாயில் பெண் எரித்துக் கொலை

/

கண்மாயில் பெண் எரித்துக் கொலை

கண்மாயில் பெண் எரித்துக் கொலை

கண்மாயில் பெண் எரித்துக் கொலை


ADDED : ஜூன் 18, 2025 10:21 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மணிவலை கிராம கண்மாயில் பெண் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.

சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புத்துரை. இவரது மனைவி உத்திரவள்ளி 38. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கருப்புத் துரை இறந்து விட்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். உத்தரவள்ளி குடும்பத்தை கவனிக்க சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மணிவலை கண்மாய் பகுதிக்குச் சென்று சீமைக் கருவேல மரம் வெட்டியவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கவில்லை.

சிக்னல் மூலம் அவரது அலைபேசி மணிவலை கண்மாய் பகுதியில் இருந்தது தெரிந்தது . அதனை வைத்து கண்டறிந்ததில் உடலில் கழுத்து மற்றும் தொடை, வயிற்றுப் பகுதிகளில் தீக்காயங்களுடன் உத்தரவள்ளி இறந்து கிடந்தார். சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த புதருக்குள் கிடந்த அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரிந்தது. கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கும் சாயல்குடி போலீசார் தொடர்புடையவர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us