sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கனுப்பாரி உற்ஸவம்

/

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கனுப்பாரி உற்ஸவம்

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கனுப்பாரி உற்ஸவம்

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கனுப்பாரி உற்ஸவம்


ADDED : ஜன 16, 2025 04:52 AM

Google News

ADDED : ஜன 16, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குதிரை வாகனத்தில் அழகர்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாட்டு பொங்கல் விழாவையொட்டி அழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கனுப்பாரி உற்ஸவம் நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வடக்கு திசை நோக்கி வைகை ஆற்றங்கரையில் உள்ளது.

இங்கு மூலவர் பரமஸ்வாமியை ஆண்டு முழுவதும் பரமபத வாசல் வழியாகவே பக்தர்கள் தரிசிக்க செல்கின்றனர்.

மார்கழி உற்ஸவங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று காலை அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் புஷ்ப சப்பரத்தில் அமர்ந்து வீதி உலா வந்து மாலை கோயிலை அடைந்தார். பெருமாள் கிருஷ்ண அவதாரத்தில் பசு மாடுகளை மேய்க்கச் சென்றார். இதனை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகள் சுபிட்சமாக இருக்க பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் லீலை நடத்தப்படுகிறது.

தொடர்ந்து வீதிகள் தோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசித்தனர். இரவு பாகவதர்கள் பஜனை பாடல்களை பாடி வந்தனர்.

அப்போது மகாதீப ஆராதனை, சோடஷ உபசாரங்கள் நிறைவடைந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.






      Dinamalar
      Follow us