sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பத்து நிமிடங்களில் முடிந்த கீழக்கரை நகராட்சி கூட்டம்

/

பத்து நிமிடங்களில் முடிந்த கீழக்கரை நகராட்சி கூட்டம்

பத்து நிமிடங்களில் முடிந்த கீழக்கரை நகராட்சி கூட்டம்

பத்து நிமிடங்களில் முடிந்த கீழக்கரை நகராட்சி கூட்டம்


ADDED : மார் 25, 2025 05:32 AM

Google News

ADDED : மார் 25, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்குள் கூட்டம் நிறைவடைந்தது.

கீழக்கரையில் நடக்கவுள்ள நகராட்சி கூட்டம் குறித்து அங்குள்ள செய்தியாளர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக நடத்தி முடிக்கப்பட்டது. பொதுமக்கள் கூறியதாவது:

கீழக்கரை நகராட்சியில் நிலவும் அத்தியாவசிய பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக வரி விதிப்பு அதிகரிப்பு, நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் தொடர் பாதிப்பை சந்திக்கின்றனர்.

தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. முறையாக ரோட்டை சீரமைக்காததால் உள்ள அவல நிலை உள்ளிட்டவைகள் குறித்து கீழக்கரை நகராட்சியில் தெரிவித்து அதற்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். 1 முதல் 21 வார்டுகளிலும் உள்ள பொதுவான பிரச்னைகளுக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்து அப்பகுதி மக்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்த வேண்டும்.

கீழக்கரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ரகசியமாக நடத்தப்பட்ட நகராட்சி கூட்டம் குறித்து நகரில் சமூக வலைதளங்கள் மூலமாக பேசப்படுகிறது என்றனர்.






      Dinamalar
      Follow us