sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காதல் திருமணம் செய்த கேரள இளம் பெண் கோர்ட்டில் ஆஜர்

/

காதல் திருமணம் செய்த கேரள இளம் பெண் கோர்ட்டில் ஆஜர்

காதல் திருமணம் செய்த கேரள இளம் பெண் கோர்ட்டில் ஆஜர்

காதல் திருமணம் செய்த கேரள இளம் பெண் கோர்ட்டில் ஆஜர்


ADDED : பிப் 06, 2025 02:40 AM

Google News

ADDED : பிப் 06, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி:காதல் திருமணம் செய்த கேரள பெண்ணை கமுதி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் 26. கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அதே நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த சக்தி 20, வேலை செய்தார். இருவரும் கோவையில் டிசம்பரில் பதிவு திருமணம் செய்தனர்.

இந்நிலையில் சக்தியை காணவில்லை என அவரது தந்தை குணசேகரன் கேரளா வடக்கஞ்சேரி போலீசில் புகார் அளித்தார்.

கேரள தனிப்படை போலீசார் கமுதியில் தங்கி இருந்த சக்தியை கேரளாவிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

சக்தி தனது கணவருடன் கமுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் 18 வயது பூர்த்தியானபின் நடந்த பதிவு திருமணம் என்பதால் பெண்ணை கேரள போலீசாருடன் அனுப்ப உள்ளூர் போலீசார் மறுத்து விட்டனர்.

இதையடுத்து கமுதி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாலமுருகன், சக்தியை ஆஜர்படுத்தினர். கேரள நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நீதிபதி சங்கீதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினார். பாலமுருகனுடன் வாழ விரும்புவதாக சக்தி கூறியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us