sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கையில் கரை ஒதுங்கியது குமரி படகு: மீனவர்கள் மீட்பு

/

இலங்கையில் கரை ஒதுங்கியது குமரி படகு: மீனவர்கள் மீட்பு

இலங்கையில் கரை ஒதுங்கியது குமரி படகு: மீனவர்கள் மீட்பு

இலங்கையில் கரை ஒதுங்கியது குமரி படகு: மீனவர்கள் மீட்பு

1


ADDED : மே 20, 2025 04:36 AM

Google News

ADDED : மே 20, 2025 04:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; அரபிக் கடலில் மூழ்கிய கன்னியாகுமரி படகு நேற்று இலங்கை கரையில் ஒதுங்கியது. இதில் இருந்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மே 9ல் கன்னியாகுமரியில் இருந்து 5 மீனவர்கள் பைபர் கிளாஸ் படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்த போது சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இதில் படகு சிக்கி கடலுக்குள் மூழ்கியது. படகில் இருந்த 5 மீனவர்களும் மிதவை உதவியுடன் உயிருக்கு போராடி நீந்திய நிலையில், அவ்வழியாக மீன்பிடித்து வந்த மற்றொரு படகின் மீனவர்கள் அவர்களை மீட்டு கன்னியாகுமரி கரைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் மூழ்கிய படகு மீட்க முடியாத நிலையில் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப நேற்று இலங்கை மாத்தறை கடற்கரையில் சேதமடைந்த நிலையில் படகு ஒதுங்கியது. இப்படகு அருகே அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலமும் ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து விசாரித்த இலங்கை போலீசார் அவர் இலங்கைகாரர் இல்லை எனவும், தமிழக மீனவராக இருக்கலாம் என தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us