ADDED : மே 20, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் சாலையில் உள்ள சக்திவேல் முருகன் கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
மே 18ல் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலையில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் சக்திவேல் முருகனுக்கு 16 வகையான அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.