sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மாயாகுளம் செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

/

 மாயாகுளம் செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

 மாயாகுளம் செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

 மாயாகுளம் செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்


ADDED : டிச 01, 2025 07:03 AM

Google News

ADDED : டிச 01, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: -: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட தச்சன் ஊருணி அருகே பழமை வாய்ந்த செங்காட்டுடைய அய்யனார் கோயில் உள்ளது.

இங்கு புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த நவ., 28 அன்று முதல் கால யாகசாலையுடன் விழா துவங்கியது.

ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை ஆகிய இடங்களில் இருந்து புனித தீர்த்தநீர் கொண்டுவரப்பட்டது.

நேற்று யாகசாலை பூஜைகளுடன் காலை 11:00 மணிக்கு செங்காட்டுடைய அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

மூலவர்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் மற்றும் ஆன்மிக பாடல் கச்சேரி நடந்தது.

ஏற்பாடுகளை நட்டாத்தி சத்திரிய ஹிந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு குழுவினர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us