/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் நாளை கும்பாபிஷேகம் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு அகற்றம்
/
உத்தரகோசமங்கையில் நாளை கும்பாபிஷேகம் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு அகற்றம்
உத்தரகோசமங்கையில் நாளை கும்பாபிஷேகம் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு அகற்றம்
உத்தரகோசமங்கையில் நாளை கும்பாபிஷேகம் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு அகற்றம்
ADDED : ஏப் 02, 2025 10:55 PM

உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் மாவட்டம்- உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. அதை முன்னிட்டு, நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு, கடந்த ஆருத்ரா தரிசனத்தன்று இங்குள்ள பச்சை மரகத நடராஜர் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களைதல் நிகழ்ச்சி நடந்தது.
சந்தனம் களைந்தபின், மரகத நடராஜர் சன்னதி அருகே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலை பந்தலில் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மரகத நடராஜர், சகஸ்ரலிங்கம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கலசம் புனித நீரால் நிரப்பப்பட்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது. யாக வேள்வியில் பூர்ணாகுதி உள்ளிட்டவை நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், குருக்கள் வேத விற்பன்னர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு சன்னதியிலும் தர்ப்பை கலசம் கும்பம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைக்கப்பட்டன. காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை இரவு 7:00 மணி வரை சந்தனாதி தைலம் பூசப்பட்ட பச்சை மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டு இரவு 8:00 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடப்பட்டு கம்பி கதவுகளுடன் நடை அடைக்கப்படும். கடந்த 2010ல் நடந்த கும்பாபிஷேகத்தில் இதுபோன்று சந்தனம் படி களைதல் நிகழ்வு நடந்தது.