
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே பத்திராதரவை ஊராட்சியில் பருத்திக்காட்டு வலசையில் உள்ள பட்டமடையான் காளியம்மன், கருப்பண்ணசுவாமி, மாடசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சார்யார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக யாகசாலையில் வேள்வி பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர்களுக்கு அபிஷேக, அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

