/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
l கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க மறுப்பால் l மூவிதழ் அடங்கல் பெற முடியாத நிலையில் அவதி
/
l கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க மறுப்பால் l மூவிதழ் அடங்கல் பெற முடியாத நிலையில் அவதி
l கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க மறுப்பால் l மூவிதழ் அடங்கல் பெற முடியாத நிலையில் அவதி
l கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க மறுப்பால் l மூவிதழ் அடங்கல் பெற முடியாத நிலையில் அவதி
ADDED : ஜன 13, 2024 04:28 AM
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லா பயிர் கடன் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள 33 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க 2023-24ம் ஆண்டிற்கு ரூ.150 கோடி இலக்கு நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஜன.31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல், இரண்டு போட்டோக்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் மூவிதழ் அடங்கலுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. சாதாரண அடங்கலுக்கு கடன் வழங்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
மூவிதழ் அடங்கலுக்கு மட்டுமே கடன் வழங்கபடும். சாதாரண அடங்கலுக்கு கடன் வழங்க முடியாது என்று கூட்டுறவு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மூவிதழ் அடங்கல் வழங்கப்பட்டது.
நவ.15 க்கு பிறகு மூவிதழ் அடங்கல் வழங்கும் பணிகள் நிறுத்தபட்டு விட்டதாக வருவாய்த்துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில் சாதாரண அடங்கல் வாங்கி கூட்டுறவு சங்கங்களில் கொடுத்தால் கடன் வழங்க மறுக்கிறார்கள் என்றனர்.
கூட்டுறவு சங்கங்களின்மண்டல இணைப்பதிவாளர் மனோகரன் கூறுகையில், இது குறித்து வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விளக்கம் கேட்டு பதில் அளிக்கிறேன் என்றார்.