/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகராட்சி பள்ளிகளில் போதிய கட்டடம் இல்லை: இடநெருக்கடியில் படிக்கும் மாணவர்கள் பாதிப்பு
/
நகராட்சி பள்ளிகளில் போதிய கட்டடம் இல்லை: இடநெருக்கடியில் படிக்கும் மாணவர்கள் பாதிப்பு
நகராட்சி பள்ளிகளில் போதிய கட்டடம் இல்லை: இடநெருக்கடியில் படிக்கும் மாணவர்கள் பாதிப்பு
நகராட்சி பள்ளிகளில் போதிய கட்டடம் இல்லை: இடநெருக்கடியில் படிக்கும் மாணவர்கள் பாதிப்பு
ADDED : மார் 02, 2024 11:35 PM

ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைபள்ளி, வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் 1500 மாணவர்கள் வரை படிக்கின்றனர்.
இங்கு பயன்பாட்டில் இருந்த சேதமடைந்த வகுப்பறை கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் போதிய இடவசதியின்றி ஒருவகுப்பறையை இரண்டாக பிரித்து மாணவர்களை அமரவைத்துள்ளனர்.
மேலும் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால், மரத்தடி நிழலில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்துகின்றனர். பலத்த காற்று, அதிக வெயிலின்போது ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோலவே வண்டிக்காரத்தெருவில் உள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாமல் கலையரங்கத்தில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்துகின்றனர்.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வரை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.
மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் ரூ.50 லட்சத்தில் ஆமைவேகத்தில் நடக்கிறது. 2024-25 கல்வி ஆண்டிலாவது நகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.80 லட்சத்தில் 10 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி மார்ச் 6ல் துவங்க உள்ளது. பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

