ADDED : அக் 09, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழகம் முழுவதும் சுமைப்பணி தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் டாஸ்மாக் கோடவுன் முன்பு மாவட்டத் தலைவர் சுடலைகாசி தலைமையில் நடந்தது.
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்பு போனஸ் வழங்குவது. டாஸ்மாக் கோடவுனில் அடிப்படை வசதிகள் செய்து தருவது.
ஸ்கேனிங் செய்யும் வேலைக்கு கூலி வழங்குவது, ஏற்றுக்கூலி பெட்டிக்கு ரூ.3.50 வழங்குவதை உறுதி செய்யவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாவட்டச் செயலாளர் போஸ், சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் சந்தானம், துணைத் தலைவர் வாசுதேவன், சுமைப்பணி தொழிலாளர்கள் மாவட்டத் துணைத் தலைவர் பூமிநாதன், கிளைத் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.