ADDED : ஜூலை 10, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்; முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகாதேவர் கோயிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.
மகாதேவருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பின் 108 விளக்கு பூஜை நடந்தது. இதே போன்று முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் பக்தர்கள் குழு சார்பில் 108 விளக்கு பூஜைநடந்தது.
மூலவரான செல்லி அம்மனுக்கு மஞ்சள், பால், திரவியப் பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்துார் திரிபுரசுந்தரி பத்ரகாளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. முதுகுளத்துார் அருகே சித்திரங்குடியில் சீலைக்காரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.