ADDED : ஜூலை 29, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி; -திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசை ஊராட்சியில் உள்ள புதுக்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரி சார்பில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மலைப்பாண்டி முன்னிலை வகித்தார். அரசு சட்டக் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் அன்பரசி, மகாதேவன் உட்பட ஏராளமான சட்டக் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.