ADDED : பிப் 18, 2025 04:49 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: கடலாடி வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பிப்.,13 முதல் 28 வரை தொழு நோய் பரிசோதனை, கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட துரைசாமிபுரத்தில் கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகு சுந்தரம் முன்னிலை வகித்தார்.
மேற்பார்வையாளர் கதிரேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர். தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
