sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி விவசாயப் பணி செய்ய முடியாமல் தவிப்பு

/

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி விவசாயப் பணி செய்ய முடியாமல் தவிப்பு

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி விவசாயப் பணி செய்ய முடியாமல் தவிப்பு

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி விவசாயப் பணி செய்ய முடியாமல் தவிப்பு


ADDED : ஜூன் 05, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுார் கிராமத்தில் உயரழுத்த மின்கம்பி தாழ்வாக செல்வதால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தரிசு நிலங்களாக விடப்பட்டுள்ளது.

மேலக்கொடுமலுார், கோனேரியேந்தல் கிராமத்திற்கு அபிராமம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பத்தின் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மேலக்கொடுமலுாரில் இருந்து கோனேரியேந்தல் கிராமத்திற்கு செல்லும் வழியில் விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் உள்ள உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது.

இதனால் விவசாய நிலத்தில் உழவுப் பணிகளை மேற்கொள்வதற்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் கொண்டு செல்ல முடியவில்லை.

இதனால் விவசாய நிலங்கள் தரிசாக மாற்றப்பட்டு வருகிறது. ஒருசில விவசாயிகள் அச்சத்துடன் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியை மாற்றியமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us