/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடகு வைத்த தங்க நகைகளுடன் தலைமறைவு:எஸ்.பி.,யிடம் புகார்
/
அடகு வைத்த தங்க நகைகளுடன் தலைமறைவு:எஸ்.பி.,யிடம் புகார்
அடகு வைத்த தங்க நகைகளுடன் தலைமறைவு:எஸ்.பி.,யிடம் புகார்
அடகு வைத்த தங்க நகைகளுடன் தலைமறைவு:எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : செப் 25, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : கடலாடி கீழக்கிடாரம் பகுதியை சேர்ந்தவர் நர்கிஸ் பானு. இவரிடம் கீழக்கிடாரம் பள்ளிவாசலில் பணியாற்றி வந்த ஒருவர் வட்டியில்லா கடன் தருவதாக கூறி தங்க நகைகள் பெற்றுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக 10 பவுன் நகைகளை கொடுத்து ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். மேலும் அப்பகுதியில் பலர் அவரிடம் நகை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அவர் குடும்பத்தினருடன் தலைமறைவு ஆகிவிட்டார். சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தங்க நகையை மீட்டு தருமாறு எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு முகாமில் நர்கிஸ் பானு புகார் அளித்தார்.