sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாயல்குடி அருகே 3.5 டன் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கியவர் கைது

/

சாயல்குடி அருகே 3.5 டன் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கியவர் கைது

சாயல்குடி அருகே 3.5 டன் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கியவர் கைது

சாயல்குடி அருகே 3.5 டன் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கியவர் கைது


ADDED : டிச 13, 2024 02:57 AM

Google News

ADDED : டிச 13, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூரில் வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபரை மரைன் போலீசார் கைது செய்தனர்.

வாலிநோக்கம் மரைன் எஸ்.ஐ., பெருமாள் மற்றும் போலீசார் நரிப்பையூரில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைத்திருந்த தகவல் கிடைத்தது. அங்கு சோதனயிட்டதில் தலா 50 கிலோ கொண்ட 70 மூடைகளில் 3500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

விசாரணையில் அரிசி மூடைகளை ஓரிவயல் சண்முகம் மகன் சந்தோஷ்குமார் 20, கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் குடிமைப் பொருள் பொருளாதார குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

வீட்டில் இருந்த 3500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடலாடி நுகர் பொருள் வாணிப கழக கோடவுனில் ஒப்படைத்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக அதிகளவில் சாயல்குடி மற்றும் கடலாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.






      Dinamalar
      Follow us