sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடி டூ இலங்கை கள்ளப்படகில் சென்றவர் கைது

/

தனுஷ்கோடி டூ இலங்கை கள்ளப்படகில் சென்றவர் கைது

தனுஷ்கோடி டூ இலங்கை கள்ளப்படகில் சென்றவர் கைது

தனுஷ்கோடி டூ இலங்கை கள்ளப்படகில் சென்றவர் கைது


ADDED : ஜூலை 29, 2025 05:19 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; இலங்கை நுவரொலியா பகுதியை சேர்ந்தவர் சிவயோகம் 45. இவர் 2024 ல் இலங்கையில் இருந்து பாஸ்போர்ட் மூலமாக விமானத்தில் இந்தியா வந்தார். ஆனால் அவரது பாஸ்போர்ட் தண்ணீரில் சேதமடைந்ததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

சட்ட விரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த நிலையில் ஜூலை 24 ல் காரைக்காலில் இருந்து காங்கேசன் துறை செல்லும் கப்பலில் இலங்கை செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். கப்பலில் ஏற சென்ற போது பாஸ்போர்ட் இல்லாததால் கப்பலில் ஏற்ற மறுத்து விட்டனர்.

தனுஷ்கோடியை சேர்ந்த குமார் 53, என்பவரை அணுகி கள்ளப்படகில் இலங்கை செல்ல வேண்டும் என சிவயோகம் தெரிவித்துள்ளார். அதற்கு குமார் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார்.

இதையடுத்து தனுஷ்கோடியிலிருந்து நாட்டுப்படகில் சிவயோகத்தை ஏற்றிக்கொண்டு குமார் இலங்கை தலைமன்னார் பகுதியில் இறக்கிவிட சென்ற போது இலங்கை கடற்படையினரிடம் சிக்கினர். இருவரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வந்து விசாரித்தனர். பின் தலை மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us