sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கவர்னருக்கு எதிராக உடுக்கு அடித்தவர் வீட்டில் நாகப்பாம்பு வளர்த்ததாக கைது

/

கவர்னருக்கு எதிராக உடுக்கு அடித்தவர் வீட்டில் நாகப்பாம்பு வளர்த்ததாக கைது

கவர்னருக்கு எதிராக உடுக்கு அடித்தவர் வீட்டில் நாகப்பாம்பு வளர்த்ததாக கைது

கவர்னருக்கு எதிராக உடுக்கு அடித்தவர் வீட்டில் நாகப்பாம்பு வளர்த்ததாக கைது


ADDED : ஜன 10, 2025 02:24 AM

Google News

ADDED : ஜன 10, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், தாதனேந்தல் ஊராட்சி, பள்ளப்பச்சேரி கிராம ஊராட்சி தலைவியாக, ஜன., 5 வரை பதவியில் இருந்தவர் கோகிலா. இவரது கணவர் ராஜேந்திரன், 48. தி.மு.க., ஆதரவாளரான இவர், நேற்று முன்தினம், 'நவீன கோடாங்கி' என்ற பெயரில் கவர்னர் ரவிக்கு எதிரான கருத்துகளை, உடுக்கு அடித்து பேசினார்.

பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உடற்பயிற்சி கூடம், ராஜேந்திரன் பராமரிப்பில் இருந்தது. இங்கு பாம்பு வளர்க்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதாவிற்கு தகவல் கிடைத்தது. வன அலுவலர், பணியாளர்கள் சோதனை நடத்தினர்.

அங்கு, 4 அடி நீள விஷமுள்ள நாகப்பாம்பு கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாம்பை வளர்த்து வந்த ராஜேந்திரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, ராமநாதபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

பறிமுதல் செய்த நாகப்பாம்பை, ராமநாதபுரம் பெரிய கண்மாய் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். வன உயிரின பாதுகாப்பு சட்டம் - 2022 திருத்தத்தின்படி, அதிகளவு பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியல் - 1ல் நாகப்பாம்பு உள்ளது. இதை வளர்ப்பதோ, பிடிப்பதோ கூடாது என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

கைதான ராஜேந்திரன், சில சினிமா படங்களில் நடித்துள்ளார்.






      Dinamalar
      Follow us