ADDED : மே 28, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பரமக்குடி ரோடு மின்வாரிய அலுவலகம் எதிரில் முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியமான ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாள் கழித்து மண்டலபூஜை நடந்தது. அனுக்ஞை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாரதனைகள் கலாசாபிஷேகம் நடந்தது.
ஐயப்பனுக்கு நெய், உட்பட அபிஷேகம் தீபாரதனை நடந்தது. ஏற்பாடுகளை முதுவை சாஸ்தா அறக்கட்டளை குருநாதர் திருமால், துணை குருநாதர் புயல்நாதன், கவுரவ தலைவர் தாமோதரன், செயலாளர் அருண்பிரசாத், பொருளாளர் மணிகண்டன், உட்பட நிர்வாக குழு நிர்வாகிகள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.