sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்


ADDED : நவ 09, 2024 02:39 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மண்டபம் பகுதி தெற்கு கடலோரத்தில் சுங்கத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்குரிய ஒரு நாட்டுப்படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த இருவர் கடலில் குதித்து நீந்தி தப்பினர். பின் படகை சோதனையிட்டதில் 400 கிலோ உயிருடன் இருந்த கடல் அட்டைகளை படகுடன் பறிமுதல் செய்தனர்.

இந்த கடல் அட்டையை மறைவான இடத்தில் கடத்தல்காரர்கள் பதப்படுத்தி கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம். பறிமுதல் செய்த கடல் அட்டையை மண்டபம் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

2002 முதல் கடல் அட்டை பிடிக்க மத்திய அரசு தடை செய்த நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள் கடல் அட்டையை பிடித்து மறைவான இடத்தில் காயவைத்து கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்துவது வாடிக்கையாகி உள்ளது.






      Dinamalar
      Follow us