ADDED : பிப் 25, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : -கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள நாராயணசுவாமி மற்றும் பத்திரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் பூர்ண புஷ்கலா சமேத அய்யனார் சன்னதி அமைந்துள்ளது.
மாசிமக உற்ஸவத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
ஏற்பாடுகளை தட்டான்தோப்பு தெரு இந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.