sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரெணபலி முருகன் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

/

ரெணபலி முருகன் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

ரெணபலி முருகன் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

ரெணபலி முருகன் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்


ADDED : பிப் 25, 2024 05:59 AM

Google News

ADDED : பிப் 25, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே பெருவயல் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயிலில் மாசித்திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.

ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில்மாசி மக உற்ஸவ விழா பிப்.13ல் தேங்காய் தொடல், காளியூட்டம் சிறப்பு பூஜைகளுடன் துவங்கி பிப்.25 வரை நடக்கிறது.

தினமும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி காலையில் பல்லக்கிலும், இரவு அன்னம், மேஷம், பூதம், யானை, மயில் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினார்.

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (பிப்.24) காலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிேஷகம் செய்து மலர் அலங்காரத்தில் தேரேற்றம் செய்து காலை 10:30 மணிக்கு ஊரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது.

இன்று (பிப்.25) தீர்த்தவாரியுடன் இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி உலாவுடன் விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us