sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொண்டியில் மீண்டும் மருத்துவ முதல்வர் காப்பீட்டு திட்ட முகாம்; தினமலர் செய்தி எதிரொலி

/

தொண்டியில் மீண்டும் மருத்துவ முதல்வர் காப்பீட்டு திட்ட முகாம்; தினமலர் செய்தி எதிரொலி

தொண்டியில் மீண்டும் மருத்துவ முதல்வர் காப்பீட்டு திட்ட முகாம்; தினமலர் செய்தி எதிரொலி

தொண்டியில் மீண்டும் மருத்துவ முதல்வர் காப்பீட்டு திட்ட முகாம்; தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஜூலை 08, 2025 10:24 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி; தொண்டியில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் முகாம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மீண்டும் நடந்தது.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவ காப்பீடு எடுக்கும் வசதி இல்லாத ஏழை மக்களுக்காக அறிமுகபடுத்தப்பட்டதே முதல்வர் காப்பீட்டு திட்டம். இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கட்டணம் இல்லாமல் உயர் சிகிச்சை பெற முடியும். அதற்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்து காப்பீட்டு திட்ட அட்டை பெற்றிருக்க வேண்டும்.

திருவாடானை தாலுகாவில் இத் திட்டத்தில் சேர்வதற்கு பதிவு செய்யும் முகாம் மச்சூர், நம்புதாளை, ஓரியூர், புதுப்பட்டினம், திருவாடானை, தொண்டியில் ஜூன் 18ல் துவங்கி 24 ல் முடிந்தது. ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டதால் மக்களிடம் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் மாலை 4:00 மணிக்கு மேல் பதிவு செய்ய முடியாது என அலுவலர்கள் தெரிவித்ததால் பெரும்பாலோர் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பினர். மேலும் வெளியூரில் வசிப்பவர்களும் இம்முகாமில் பதிவு செய்ய முடியவில்லை.

எனவே மீண்டும் முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக மீண்டும் தொண்டி மேலபள்ளிவாசல் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் முகாம் நடந்தது. ஏராளமானோர் பயனடைந்தனர்.






      Dinamalar
      Follow us