ADDED : செப் 07, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே பனைக்குளம் அர் ரஹ்மான் பள்ளிவாசலில், முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு, 11 நாட்களாக மௌலீது ஓதப்பட்டது.
தொடர்ந்து இறுதி நாளில் பள்ளிவாசல் பேஷ் இமாம் ஜவஹர் ரஹ்மான் தலைமையில், ஆலீம்கள் மௌலீது ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்ட னர்.
நிகழ்ச்சியில், பனைக்குளம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். பொதுமக் களுக்கு தேங்காய்சோறு வழங்கப்பட்டது.