
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி ; கமுதி அருகே பேரையூர் கிராமத்தில் கருப்பண்ணசுவாமி, அரியநாச்சி அம்மன் கோயில் களியாட்டம், பொங்கல், முளைப்பாரி விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
இந்நிலையில் காப்பு கட்டிய பக்தர்கள் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்கத்தில் இருந்து இருளப்பசுவாமி கோயில், கண்மாய்க்கரை உட்பட முக்கிய வீதியில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். அரியநாச்சி அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம் உட்பட பொருள்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.