/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மலட்டாறு நீர் வழித்தட பகுதிகளை பாதுகாப்பதற்கு.. மனமில்லாத அதிகாரிகள்; சீமைக் கருவேல மரங்களை அகற்றி சீரமைப்பீர்களா
/
மலட்டாறு நீர் வழித்தட பகுதிகளை பாதுகாப்பதற்கு.. மனமில்லாத அதிகாரிகள்; சீமைக் கருவேல மரங்களை அகற்றி சீரமைப்பீர்களா
மலட்டாறு நீர் வழித்தட பகுதிகளை பாதுகாப்பதற்கு.. மனமில்லாத அதிகாரிகள்; சீமைக் கருவேல மரங்களை அகற்றி சீரமைப்பீர்களா
மலட்டாறு நீர் வழித்தட பகுதிகளை பாதுகாப்பதற்கு.. மனமில்லாத அதிகாரிகள்; சீமைக் கருவேல மரங்களை அகற்றி சீரமைப்பீர்களா
ADDED : டிச 21, 2024 07:32 AM

கடலாடி: கடலாடி அருகே மங்களம் வழியாக கொம்பூதி கிராமத்திற்கு செல்லும் வழியில் 200 மீ.,க்கு மலட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வழித்தட பகுதிகள் முழுவதும் சீமைக்கருவேல மரங்களால் தொடர் ஆக்கிரமிப்பில் உள்ளது.
எவ்வளவு மழை பெய்தாலும் அவற்றை உள்வாங்கும் வகையில் மலட்டாறாற்றின் நீளம், அகலம் உள்ளிட்டவை கரைப்பகுதிகள் இருந்தாலும் நீரை சேமிக்கும் முயற்சிக்கு பாதகமாக சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சாயல்குடி விவசாயி முருகேசன் கூறியதாவது:
கொம்பூதி அருகே மலட்டாற்றில் இருந்து கடலாடி,
பூப்பாண்டிபுரம் வழியாக செல்லும் உபரி வெள்ள நீர் மூக்கையூர் கடலில் கலந்து வீணாகிறது. மலட்டாறு ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்கள் சட்டவிரோதமாக மண் அள்ளும் சம்பவத்தை இரவு நேரங்களில் அரங்கேற்றி வருகின்றனர்.
இதனால் கனிம வளக்கொள்ளை சத்தம் இல்லாமல் நடக்கிறது. நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் மலட்டாற்று பாலத்தில் தண்ணீர் வரத்தின்றி காய்ந்துள்ளது. ஆற்றின் வழித்தடங்கள் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் நீரை சேகரிக்க வழியின்றி சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை கண்மாய் பாசன அதிகாரிகள் மலட்டாறு வழித்தடங்களை கண்டறிந்து அவற்றை உரிய முறையில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய அதிகாரிகள் மனமில்லாமல் உள்ளனர்.
எனவே வரக்கூடிய கோடை காலத்தில் மலட்டாறு வழித்தடம், இரு புறங்களிலும் உள்ள கரைப்பகுதியை வலுப்படுத்தவும் ஆற்றின் நீரோட்டத்தை முறையாக ஆழப் படுத்தவும் வேண்டும். பாசனத்தை நம்பி 5000 ஹெக்டேரில் நெல், சிறுகுறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கண்மாய் பாசனத்திற்கு ஏற்ற வகையில் மலட்டாற்றின் வழித்தடம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது என்றார்.

