ADDED : ஜன 21, 2026 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூரில் 'போதையில்லா நமது பள்ளி 2026' என்ற விழிப்புணர்வு வாசகத்தை முன்வைத்து நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திருவாடானை கிளை சேது சீமை பட்டாளம், ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி நடந்தது.
எஸ்.பி. பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். தாளாளர் ஆரோக்கியம், தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ், உடற்கல்வி ஆசிரியர் பெனடிக் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

