/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாதி கிணறு தான் தாண்டியுள்ளோம் பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
/
பாதி கிணறு தான் தாண்டியுள்ளோம் பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
பாதி கிணறு தான் தாண்டியுள்ளோம் பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
பாதி கிணறு தான் தாண்டியுள்ளோம் பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
ADDED : பிப் 18, 2024 07:00 AM

ராமநாதபுரம்: '' தற்போது பாதி கிணறு தான் தாண்டியுள்ளோம். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் தான் முழு கிணற்றை தாண்டியதாக அர்த்தம்'' என அமைச்சர் உதயநிதி பேசினார்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடந்த தி.மு.க., லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது: சேலத்தில் நடந்த கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். அது நமக்கு கிடைத்த 50 சதவீதம் வெற்றி தான். தற்போது பாதி கிணறு தான் தாண்டியுள்ளோம். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் தான் முழு கிணற்றை தாண்டியதாக அர்த்தம்.
மத்திய அரசு நமது மொழி உள்ளிட்ட உரிமைகளை பறிக்கிறது. ஹிந்தியை திணிக்கிறது. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நமது குழந்தைகள் படிக்காமல் இருக்க அத்தனை வேலைகளையும் செய்து வருகிறது. நிதியுரிமையும் பறிக்கப்படுகிறது. நாம் வரியாக 6 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கொடுத்துள்ளோம். அவர்கள் நமக்கு கொடுத்தது 1.50 லட்சம் கோடி. நாம் ஒரு ரூபாய் கட்டினால் 28 காசுகள் வழங்குகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் 2 முதல் 3 ரூபாய் வரை மும்மடங்கு அதிகரித்து வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.