sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 சிவன் கோயில்களில் சோமவாரம் துவக்கம்

/

 சிவன் கோயில்களில் சோமவாரம் துவக்கம்

 சிவன் கோயில்களில் சோமவாரம் துவக்கம்

 சிவன் கோயில்களில் சோமவாரம் துவக்கம்


ADDED : நவ 17, 2025 12:09 AM

Google News

ADDED : நவ 17, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிேஷகம் நடைபெறும். கார்த்திகை சோமவாரம் சிவ வழிபாட்டுக்கு உகந்தது. சிவபெருமானுக்கான விரதங்களில் முக்கியமானது சோமவாரம். இன்று கார்த்திகை பிறப்பு அன்றே சோமவாரமும் துவங்குகிறது. (இன்று) நவ.17, 24, டிச.1,8,15, ஆகிய 5 திங்கள் அன்று சோமவாரம் கடைபிடிக்கபடுகிறது. அன்று மாலை சங்காபிேஷகம் நடைபெறும்.

இது குறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது- சந்திரனுக்குரிய நாளான திங்கள் கிழமை இது கடைபிடிக்கபடுகிறது. கார்த்திகை மாதத்து சோமவாரம் தனிசிறப்பு பெறுகின்றன.

அன்றையதினம் சங்குகளில் நீரை நிரப்பி யாகசாலையில் வைத்து வேள்வி செய்து அந் நீரால் சிவபெருமானுக்கு அபிேஷகம் நடைபெறும்.

இந்த ஆண்டு கார்த்திகையில் 5 சோமவாரம் உள்ளது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வன்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் மற்றும் கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் சங்காபிேஷம் நடைபெறும். சிவனை வழிபட துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்றனர்.






      Dinamalar
      Follow us