sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழைக்கால நோய்: தப்பிக்க அறிவுரை

/

மழைக்கால நோய்: தப்பிக்க அறிவுரை

மழைக்கால நோய்: தப்பிக்க அறிவுரை

மழைக்கால நோய்: தப்பிக்க அறிவுரை


ADDED : அக் 23, 2025 11:21 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: மழைக் கால நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தொண்டி அருகே காரங்காட்டில் சுகாதாரம் குறித்த ஆய்வுப் பணிகள் நடந்தது. மாவட்ட மலேரியா அலுவலர் கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் சந்தனராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிராமங்களில் மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி உள்பட பலவித நோய்கள் மக்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே மழைக் கால நோய்களில் இருந்து தப்பிக்க வீடுகள், ஓட்டல்கள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் குடிநீரை கொதி நிலை வரை காய்ச்சி பிறகு ஆற வைத்து குடிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் ஆட்டுக்கல், டயர்கள், பிளாஸ்டிக் பைகளில் மழை நீர் தேங்கி நிற்பதை தடுப்பதன் மூலம் கொசு உற்பத்தியை குறைக்கலாம்.

சுற்றுப்புறங்களில் கழிவு நீர், குப்பை தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். காய்ச்சல் என்றால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us