sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அம்மன் கோயில்களில் முளைப்பாரி ஊர்வலம்

/

அம்மன் கோயில்களில் முளைப்பாரி ஊர்வலம்

அம்மன் கோயில்களில் முளைப்பாரி ஊர்வலம்

அம்மன் கோயில்களில் முளைப்பாரி ஊர்வலம்


ADDED : அக் 02, 2025 10:36 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்; முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரத்தில் செல்லி அம்மன் கோயில் முளைப்பாரி விழா ஒரு வாரத்திற்கு முன் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர். பின் முளைக்கொட்டு திண்ணை யில் இருந்து முளைப்பாரி துாக்கி ஆற்றுப்பாலம், பஜார், செல்லிஅம்மன் கோயில் உட்பட முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்த னர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அடைக்கலம் காத்த அம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. கோயில் முன் மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

பசும்பொன் கிராமத்தில் இருந்து முளைப்பாரிகளை முக்கிய வீதிகளில் ஊர் வலமாக துாக்கி சென்று தண்ணீரில் கரைத்தனர்.






      Dinamalar
      Follow us