ADDED : பிப் 09, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பல்துறை பணி விளக்க சிறப்பு முகாம் ராதாப்புளி கிராமத்தில் நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கர மணியன் தலைமை வகித்தார். நயினார்கோவில் உதவி இயக்குனர் பானுபிரகாஷ், உதவி பொறியாளர் மதன்குமார் உட்பட பலர் பேசினர். விவசாயிகளுக்கான மானியங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் லாவண்யா, உதவி அலுவலர் ஜெயப்பிரியா செய்தனர்.

