sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் ஜிபே மூலம் லஞ்சம் பெற்ற நகராட்சி டி.பி.ஓ., கைது

/

பரமக்குடியில் ஜிபே மூலம் லஞ்சம் பெற்ற நகராட்சி டி.பி.ஓ., கைது

பரமக்குடியில் ஜிபே மூலம் லஞ்சம் பெற்ற நகராட்சி டி.பி.ஓ., கைது

பரமக்குடியில் ஜிபே மூலம் லஞ்சம் பெற்ற நகராட்சி டி.பி.ஓ., கைது


ADDED : ஜன 23, 2025 12:06 PM

Google News

ADDED : ஜன 23, 2025 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பணியாற்றும் டி.பி.ஓ., வீடு கட்ட பிளான் அப்ரூவல் வழங்க, ஜிபே மூலம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரல் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமான நான்கு மாடி வீடு கட்ட அப்ரூவல் கட்டணமாக, 76 ஆயிரத்து 850 ரூபாய் நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து பிளான் அப்ரூவல் கேட்டபோது, டி.பி.ஓ., பர்குணன், தனக்கு ஒரு வீட்டு மனைக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும், என கேட்டுள்ளார். தொடர்ந்து பணத்தை வழங்காத நிலையில் பைல்கள் அப்படியே கிடக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்ஜினியர் லஞ்ச ஒழிப்பு துறையை தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், 20 ஆயிரம் ரூபாயை பர்குணனுக்கு, ஜிபே., மூலம் அனுப்பும்படி தெரிவித்தனர். இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார், பர்குணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us