/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துமாரியம்மன் முளைப்பாரி விழா
/
முத்துமாரியம்மன் முளைப்பாரி விழா
ADDED : ஆக 06, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே இந்திரா நகர்,பாரனுார், சோழந்துார், மேலேந்தல் முத்து மாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா நடைபெற்றது. வீடுகளில் வளர்க்கப்பட்டிருந்த முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.
அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை கிராம விழாக் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.