/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையிலிருந்து வரும் மர்ம படகுகள் : ரோந்து பணி தீவிரம்
/
இலங்கையிலிருந்து வரும் மர்ம படகுகள் : ரோந்து பணி தீவிரம்
இலங்கையிலிருந்து வரும் மர்ம படகுகள் : ரோந்து பணி தீவிரம்
இலங்கையிலிருந்து வரும் மர்ம படகுகள் : ரோந்து பணி தீவிரம்
ADDED : டிச 22, 2025 05:07 AM
திருவாடானை: இலங்கையிலிருந்து மர்ம படகுகள் வருகை அதிகரிப்பால் தமிழக கடலோர பகுதியில் கண்காணிப்பு தீவிர மடைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரை பகுதிகளை கொண்டது. இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது. ஆந்திரா, ஒடிசா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ராமநாதபுர மாவட்ட கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு அனுப்புகின்றனர். மரைன் போலீசாரின் கெடுபிடியையும் மீறி கஞ்சா கடத்தல் அதிகரித்து வருகிறது. தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கடற்கரை முகத்துவார பகுதிக்கு சில நாட்களாக இலங்கை படகுகள் இரவில் அடிக்கடி வருவதை மீனவர்கள் பார்த்துள்ளனர்.
சக்திவாய்ந்த இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டு அதிக குதிரை திறனுடன் வரும் இப்படகுகள் கண் இமைக்கும் வேகத்தில் சென்று மறைந்து விடுகின்றன. கடலோர காவல் படையினர் எஸ்.பி. பட்டினம் ஆற்று முகத்துவாரம் பகுதியில் ஆய்வு செய்தனர். இச் செய்தி தினமலர் நாளிதழில் டிச.18 ல் வெளியானது. இலங்கையிலிருந்து மர்ம படகுகள் ஊடுவருவலை தடுக்கும் வகையில் இந்திய கடலோர காவல் படை மற்றும் மரைன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மர்ம படகுகள் வருவது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மீனவர்களிடம் வலியுறுத்தினர்.

