sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் ஏட்டு மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு

/

ராமநாதபுரம் ஏட்டு மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு

ராமநாதபுரம் ஏட்டு மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு

ராமநாதபுரம் ஏட்டு மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு


ADDED : பிப் 10, 2025 12:24 AM

Google News

ADDED : பிப் 10, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் மீனாட்சி நகரில் பூட்டிய வீட்டிற்குள் ஏட்டு முரளிசெல்வத்தின் 42, அழுகி கிடந்த உடலை மீட்ட போலீசார் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி கொடிக்குளம் வீரகுலசேகரபாண்டியன் மகன் முரளிசெல்வம் 42. இவர் 2003 ல் போலீசில் பணியில் சேர்ந்த நிலையில் ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். பட்டணம்காத்தான் மீனாட்சி நகரில் மனைவியை பிரிந்து தனியாக வசித்தார். மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்தார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முரளி செல்வம் உயிரிழந்து உடல் அழுகிய நிலையில் கிடந்தார்.

அதனை மீட்ட கேணிக்கரை போலீசார் ஏட்டு இறந்தது எப்படி என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us