/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
/
பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
ADDED : செப் 27, 2025 03:53 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் தலைமை ஆசிரியை மெஸ்ஸியானந்தி தலைமை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விக்டர் ஆரோக்கியசாமி வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு பிரின்ஸ் ஆரோக்கியராஜ் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் மாணவர்கள் பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் துாய்மை பணிகளை மேற்கொண்டனர். பேரூராட்சி தலைவர் மவு சூரியா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சசிகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ், முன்னாள் மாவட்ட தொடர்பு அலு வலர் ராமகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர் வைரவன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.