/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
/
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 29, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் செங்கோட்டைபட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் நடந்தது. கல்லுாரி தலைவர் அகமது யாசின் தலைமை வகித்தார்.முதல்வர் ராமர் முன்னிலை வகித்தார்.
முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நீர்நிலை பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். பின் மாணவர்கள் பசுமை புரட்சி, மண்வளம், நீர்நிலை பாதுகாப்பு பற்றி கிராம மக்களுக்கு எடுத்துரைத்தனர். உடன் துணை முதல்வர் திருவேணி, உதவி பேராசிரியர்கள் அமுதா, தமிழ்ச்செல்வன் உட்பட கிராம நிர்வாகிகள், மாணவர்கள் பலர் இருந்தனர்.