/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நவக்கிரகங்கள் நீரில் மூழ்கின
/
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நவக்கிரகங்கள் நீரில் மூழ்கின
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நவக்கிரகங்கள் நீரில் மூழ்கின
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நவக்கிரகங்கள் நீரில் மூழ்கின
ADDED : நவ 26, 2025 04:40 AM

ஆர்.எஸ்.மங்கலம்: வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலின் சீற்றம் காரணமாக தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகங்கள் கடல் நீரில் மூழ்கின.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகங்களை பக்தர்கள் எளிதாக சுற்றி வந்து தரிசனம் செய்யும் வகையில் நவக்கிரகங்களுக்கு செல்வதற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எளிதாக சென்று வரும் நிலை உள்ளது.
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலில் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நீர்மட்டம் உயர்ந்து நவகிரகங்கள் மூழ்கியுள்ளன. இரண்டு நாட்களாக நவக்கிரகங்கள் மூழ்கியதால் நீரில் இறங்கி சுற்றி வந்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடைமேடையில் இருந்தவாரே பக்தர்கள் நவக்கிரகங்களை தரிசனம் செய்து செல் கின்றனர்.
நேற்று காலை முதல் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்கள் மட்டுமே லேசாக வெளியில் தெரிந்தன. மற்ற சுக கிரகங்கள் மூழ்கியிருந்தன. இதனால் சுக கிரகங்களை வழிபட முடியாமல் பக்தர்கள் பாதிப்படைந்தனர். இயற்கை சீற்றம் காரணமாக கடலில் மாற்றங்கள் ஏற்படும் போது கடல் நீர் மட்டம் உயர்ந்து மூழ்குவதும் பின் நீர் மட்டம் குறைவதும் இயல்பு தான் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

