/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் தீர்த்தத்தில் சாதுக்கள் இலவசமாக நீராட அனுமதிக்கணும்! நேபாளம் மடாதிபதி கோரிக்கை
/
ராமேஸ்வரம் தீர்த்தத்தில் சாதுக்கள் இலவசமாக நீராட அனுமதிக்கணும்! நேபாளம் மடாதிபதி கோரிக்கை
ராமேஸ்வரம் தீர்த்தத்தில் சாதுக்கள் இலவசமாக நீராட அனுமதிக்கணும்! நேபாளம் மடாதிபதி கோரிக்கை
ராமேஸ்வரம் தீர்த்தத்தில் சாதுக்கள் இலவசமாக நீராட அனுமதிக்கணும்! நேபாளம் மடாதிபதி கோரிக்கை
ADDED : டிச 04, 2024 12:58 AM

ராமேஸ்வரம்:'ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தீர்த்தங்களில் சாதுக்கள், சன்னியாசிகள் இலவசமாக புனித நீராட, தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்' என, நேபாளத்தை சேர்ந்த மடாதிபதி யோகி பயாக்ரா வித்நாத் கோரிக்கை விடுத்தார்.
நேபாளம் தலைநகர் காத்மாண்டு பசுபதிநாத்தில் உள்ள கோரக்நாத் மடத்தின் நிர்வாகி யோகி பயாக்ரா வித்நாத் தலைமையில் சன்னியாசிகள் உள்ளிட்ட 48 பேர், புனித யாத்திரையாக நவ., 25ல் பஸ்சில் புறப்பட்டு 2800 கி.மீ., பயணித்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று வந்தனர்.
அவர்களை வி.எச்.பி., தென் மண்டல அமைப்பாளர் சரவணன், ஹிந்து முன்னணி நகர் செயலர் நம்புராஜன், ஹிந்து மகா சபா தலைவர் மேகநாதன் வரவேற்றனர். இவர்கள் கோவிலில் புனித நீராடி தரிசனம் செய்து, ராமாயண பஜனை நடத்தினர்.
மடாதிபதி பயாக்ரா வித்நாத் கூறியதாவது:
உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோவிலில் புனித நீராடி தரிசித்தோம்.
இங்கு கோவில் தீர்த்தங்களில் நீராட, தரிசிக்க பக்தரிடம் அரசு கட்டணம் வசூலிப்பது வேதனைக்குரியது. சாதுக்கள், சன்னியாசிகளுக்கு இலவசமாக புனித நீராட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.