/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய தமிழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
/
புதிய தமிழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
ADDED : மே 11, 2025 11:23 PM
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள சமுதாய கூடத்தில் புதிய தமிழகம் கட்சியின் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளின் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
புதிய தமிழகம் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் மலைச்செல்வம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் மகேஷ் குமார், பாலுச்சாமி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், நாகராஜன், மங்களசாமி, ராமு, ராதா உட்பட பலர் பங்கேற்றனர்.
உத்தரகோசமங்கை வசந்த மண்டபம் முன்புறமுள்ள தெப்பக்குளத்தை துார்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உபயோகித்திட அரசை கேட்டுக் கொண்டும்,
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்கள் சென்று வர கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் எனவும், உத்தரகோசமங்கை அருகே களக்குடியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலாளர் குருநாதன் நன்றி கூறினார்.