
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்:: முதுகுளத்துார் அருகே எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமத்தில் வேம்பார் உடைய அய்யனார், வாழவந்த அம்மன் கோயில் நான்காம் ஆண்டு பூத்தட்டு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு குத்துவிளக்கு, ரொக்க பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராம மக்கள் செய்தனர்.

