ADDED : பிப் 21, 2026 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் புல்லங்குடியில் நடந்தது.
முதல்வர் உதயகுமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் பி.டி.ஓ., சோமசுந்தர், பணி மேற்பார்வை யாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.
பல்கலை கல்லுாரி கண்காணிப்பாளர் ராஜகுமார், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் எஸ்தர் வேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிராமத்தில் துாய்மை பணி, மரக்கன்றுகள் நடுதல் நடந்தது.

