ADDED : ஜன 31, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவப் பயிற்சி நடந்தது.
மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாவட்ட அலுவலர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.
திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
திருவாடானை ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 206 ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

