ADDED : பிப் 10, 2025 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: -மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட மங்களேஸ்வரி நகரில் உள்ள கடலில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா நடந்தது.
ராமேஸ்வரம் ராமசேது மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி குழு மற்றும் மங்களேஸ்வரி நகர் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து நேற்று காலையில் தீர்த்த ஆரத்தி பூஜைகளை செய்தனர்.
மன்னார் வளைகுடா கடலுக்கு பால், பன்னீர், நறுமண திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் அபிஷேகமாக கடலில் சேர்க்கப்பட்டது. கும்பத்தால் புனித நீர் ஊற்றி அபிஷேக அலங்காரத்தில் தீப துாப பூஜைகள் நடந்தது. 7 சிறுமியர்கள் அலங்கரிக்கப்பட்டு சப்த கன்னிமார் பூஜைகளும், 108 விளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜையும் நடந்தது.

