/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் 6 மாதங்களில் நாய் கடித்து 400 பேர் பாதிப்பு நடவடிக்கை எடுங்க ஆபிசர்
/
கீழக்கரையில் 6 மாதங்களில் நாய் கடித்து 400 பேர் பாதிப்பு நடவடிக்கை எடுங்க ஆபிசர்
கீழக்கரையில் 6 மாதங்களில் நாய் கடித்து 400 பேர் பாதிப்பு நடவடிக்கை எடுங்க ஆபிசர்
கீழக்கரையில் 6 மாதங்களில் நாய் கடித்து 400 பேர் பாதிப்பு நடவடிக்கை எடுங்க ஆபிசர்
ADDED : ஜூலை 26, 2025 11:30 PM
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களுக்குள் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெறி நாய்களின் கடிக்கு ஆளாகியுள்ளனர்.
கீழக்கரையில் ஒன்று முதல் 21 வார்டுகள் உள்ளன. 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக் கின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் கடந்த ஜன., மாதத்தில் 43 பேரும், பிப்., மாதத்தில் 42 பேரும்,, மார்ச் மாதத்தில் 43 பேரும், ஏப்., மாதத்தில் 47 பேரும், மே மாதத்தில் 64 பேரும், ஜூன் மாதத்தில் 70 பேரும், நடப்பு ஜூலை மாதத்தில் 55 பேரும் வெறி நாய்களின் கடிக்கு ஆளாகியுள்ளதாக மருத்துவமனையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தன்னார்வலர்கள் கூறியதாவது:
கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றவர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் இது மட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சாலையில் கூட்டமாக திரியும் வெறிநாய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரட்டி கடிப்பது வாடிக்கையாக உள்ளது.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் வெறிநாய்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் முனைப்பு காட்ட வேண்டும்.
நாய்களை பிடித்து அவற்றை கு.க., செய்வதற்கு நகராட்சி சார்பில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை பொதுமக்களுக்கு தொல்லை தரும் நோய் பரப்பும் நாய்களால் பொதுமக்கள் அவதி அடை கின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் இவ் விஷயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது என்றனர்.